Description
Language Tamil. ஸ்ரீபகவானது நூற்றாண்டு ஜயந்தி வெளியீடாக முதல் 1980ஆம் ஆண்டிலும் தற்போது அறுபதுக்கும் மேற்பட்ட ரமண அடியார்களின் வாழ்க்கைக்குக் குறிப்புகளை புதிதாகச் சேர்த்தும் ஸ்ரீகுஞ்சு சுவாமிகளின் எனது நினைவுகள் மூன்றாம் பதிப்பு வெளியிடப்படுகிறது.
இறைவனாலேயே மந்திர உபதேசம் மற்றும் ருத்ராக்ஷ மாலையும் விபூதிப்பையும் பெற்றது, சிறந்த நினைவாற்றல், தமிழ் வேதாந்த கிரந்தங்களின் நிபுணத்துவம், ஸ்ரீபகவானது கந்தாச்ரம நாட்களிருந்து அவருக்குக் குற்றேவல் செய்யும் பாக்கியம், தனது இறுதிகாலமான 95 வயது (ஆகஸ்ட் 1992) வரை தன்னை அண்டிய பக்தர்களுக்கு அலுப்பு சப்பின்றி எந்நேரத்திலும் ஸ்ரீரமண வாழ்வு, வாக்குகளைத் திறம்பட எடுத்துரைத்தல் என இவரது சிறப்புகளை அடுக்கிக் கொண்டே போகலாம்.
பண்டைக்கால ரிஷிகளைப் போன்று தனக்கும் ஆன்மிக அனுபவம் கிடைக்க வேண்டும் என்ற ஏக்கம் கொண்ட இவரை எங்கும் நிறைந்த ரமண சாந்நித்தியம் தன்னிடம் இணைத்து அருளியது மட்டுமன்றி, இவர்மூலம் மற்றும் பலரையும் ரமணத் திருவருள் பெற இந்நூல் அழைப்பதையும் வாசகர்கள் உணரலாம்.