Description
Language Tamil,ஸ்ரீ பகவானது பழவடியார்கள் வரிசையில் இந்நூலாசிரியையான ஸ்ரீமதி கனகம்மாளும் ஒருவர்.
ஸ்ரீ பகவானது தீவிர பக்தையான இவர், பகவான் தொடர்புடைய பல சுவையான நிகழ்ச்சிகளை இந்நூலில் சித்தரித்துள்ளார். மேலும், ஸ்ரீ அருணாசலேஸ்வரர் கோயில் சார்ந்த நிகழ்ச்சிகளையும் சுவைபடக் கூறியுள்ளார்.
ஸ்ரீ பகவான் தொடர்புடைய பல முக்கிய நிகழ்ச்சிகளின்போது இந்நூலாசிரியையும் மெய்யடியார் முருகனாரும் உடன் இருந்ததால், இந்நூல் உண்மையை உள்ளது உள்ளபடி பிரதிபலிக்கின்றது. ஸ்ரீமதி கனகம்மாளின் தமிழ்ப்புலமை இந்நிகழ்ச்சிகளை நாம் நேரே காண்பது போன்ற உணர்வை உண்டாக்குகின்றது.
ஆன்மிக வாழ்க்கை எங்ஙனம் அமைய வேண்டும் என்றறிய விழைவோர்க்கு இந்நூல் ஒரு சிறந்த வழிகாட்டியாகத் திகழும் என்பதில் ஐயமில்லை.
பக்கங்கள் 289