Description
Language Tamil.Author Sadhu Om நினைக்க முக்தி யருள்வதால் முக்தித் தலங்களுள் அதி மர்மமான சிவஸ்தல மென்றும், பூமியின் இதயமென்றும் நந்திகேசுவரரது வாக்காற் புகழப்பெற்று விளங்கும் அருணாசலம் என்னும் ஞானாக்கினி மலையின் தென்சாரலில், சாக்ஷாத் ஸ்ரீ தக்ஷிணா மூர்த்தி சொரூபமாய் எழுந்தருளிய, உலக மகா குருவாகிய ஸ்ரீரமண பகவானைப் பாட்டுடைத் தலைவராகக் கொண்டு ஸ்ரீசாதுஓம் ஸ்வாமிகளாற் பாடப்பட்ட குரு ஸ்துதிகளே ஸ்ரீரமண கீதம் என்னும் இந்த இசை நூலாகும்.
இந்நூலாசிரியர் தம் இளம் பிராயத்திலேயே ஸ்ரீரமண பிரானைத் தரிசித்து வணங்கித் தமது சற்குருவாகக் கொண்டு, தம் குருபக்திப் பிரவாக வேகத்தை அரிய இனிய செந்தமிழ்க் கவிதைகளாகப் பாடி வந்தவர். ஸ்ரீ ரமண குருவைத் தாம் முதன் முதலில் தரிசிக்க வந்தபோது பாடிக் கொணர்ந்த “குயிலொடு கூறல்” என்ற பாடலையும், பிறகு 1950-ஆம் ஆண்டில் தம் குருநாதனின் திருமேனி மறைவால் ஏற்பட்ட பிரிவாற்றாமையால் உள்ளம் விம்மி வெதும்பிக் கண்ணீர் வடித்துப் பாடிய “அண்ணாமலை ரமணான்டி” என்ற சிந்துப் பாவையும் படிப்போர் இந் நூலாசிரியரின் ரமண பக்தியை நன்குணர முடியும்.
பக்கங்கள் 280