Description
இசைஞானி இளையராஜா, பகவான் ஸ்ரீ ரமண மகரிஷிகளின் மீது இயற்றிய பக்திப் பாடல்களின் தொகுப்பு. ஒலிவடிவில் இதுவரை வெளிவந்த அவரது பாடல்கள் தற்போது வரிவடிவில் வெளியிடப்பட்டுள்ளது.
ரமண மகரிஷிகளின் நிலை என்ன என்பதை பாமரர்களும் எளிதில் புரிந்துகொள்ளும் வண்ணம் உடம்போடு வாழ்ந்தாலும் உடம்பின்றி வாழ்ந்தவன் குரு ரமணன் என்றும் முற்றும் தேக வாழ்வு முடிந்தாலும் அவன் தேகி இல்லை போன்ற வரிகளில் தெள்ளென வெளிப்படுத்தியுள்ளார்.
இசையால் நம் அனைவரையும் வசியம் செய்த இசைஞானி இளையராஜா தமது கவித்திறத்தாலும் அனைவரையும் ஈர்த்திருக்கிறார் என்பதை பாடல் வரிகளைப் படிப்போர் உணர்வர்.
pp.112