Description
Language Tamil.
சிவபெருமான் மூலம் பார்வதிதேவி – கந்தன் – ஜைகீஷவ்யர் (வியாஸர்) – சூதர் – மற்ற முனிவர்களுக்கும், மீண்டும் சிவபெருமானால் ரிபு முனிவர் – நிதாகன் என்று இவ்வண்ணமாக உபதேசிக்கப்பட்டு கைலாய பரம்பரையாய் உதித்த இந்த ரிபுகீதை சிவ ரஹஸ்யத்தின் இதயஸ்தானமாம். இதனைத் தமிழ் கூறும் நல்லுலகிற்கு சொற்சுவை பொருட்சுவை நனிசேர அருளியவர் உலகநாத சுவாமிகள். சொல்லில் அடங்கா மகிமையுடைய இதனை ஸ்ரீ ரமண மகரிஷிகள், சாதகர்களுக்கு இது ஓர் பொக்கிஷம் என்று விளக்கியுள்ளார். நெஞ்சை அள்ளும் சீரும் சிறப்பும் வாய்ந்த 1924 பாக்களும் பக்குவிகளுக்கு பாராயணம் செய்யச்செய்ய ஆன்ம ஞானத்தை அளிக்க வல்லது என்பது திண்ணம்.
பக்கங்கள் 532