Description
Language Tamil.ஓருருவு மொருபெயரு மொருகுணமு மொருசெயலும்
ஓரணுவு மில்லா வுடையதிரு வேங்கடவன்
நேரெதிரில் வந்துவந்தென் னெஞ்சுருக்கி யாட்கொண்ட
ரருளை யேத்திநாந் தெள்ளேணங் கொட்டாமோ
என்று உருகுகிறார் முருகனார் சுவாமி.
இவ்வாறு நாமரூபம் கடந்த பகவான் — மான் காட்டி மான் பிடிப்பது போல் — அன்பர்களின் தேகாத்ம பாவனையை நீக்க வேண்டித் தானும் தேகம் கொண்டு வாழ்ந்தபோதும், தேகத்துடன் பற்றில்லாத தமது இருப்பை, வாழ்வை பக்தர்கள் உணர்ந்திட வேண்டி, தேக வாழ்வின் இறுதிப் பகுதியில் கொடிய புற்றுநோய் வந்து தேகத்தைப் பற்றிய அந்நிலையிலும் தன்னிலை மாறாது தண்நிலவாய் அன்பும் அருளும் பொழிந்த அதிசயத்தை இந்நூலில் காணலாம்.
பக்கங்கள் 68