Description
Language Tamil Compiled by V. Ganesan. Translated into Tamil by by Srimati Saroja Krishnan.
மாசிலா பரமஞானிக்கு மகேசனும், ஹரியும், பிரம்மனும் ஈடாக மாட்டார்கள் என்று பிரம்மகீதை உறுதிப்படுத்துகின்றது.
“ஞாலமுண்டவன் (விஷ்ணு) தலைமிசைச் சுமப்பன் மெய்ஞ்ஞானி வேண்டுவவெல்லாம்; ஆலமுண்டவன் (சிவன்) அவன்பினே திரிகுவன் அவனடித்துகட்கு அன்றோ…” என்கிறது குறுந்திரட்டு.
உணர்வு சான்ற பெரியோரை எவ்வகையும் பேணல் வேண்டும் என்கிறது ஞானவாசிஷ்டம்.
(தன்னையுணர்ந்து ததாகார நிலையிலமர்ந்த ரமணரைப் போன்ற) “சாதுக்களாவார் சகவாசம் நண்ணினால் ஏதுக்காம் இந்நியமமெல்லாமும்…” என்று சாதுக்களின் சங்கம் பெரிதும் பரிந்துரைக்கப் படுகின்றது.
பிரம்ம வரிஷ்டராம் பகவான் ரமணரின் சகவாசம் கிடைக்கப்பெற்ற ஜீவர்களின் பெரும் பாக்கியம்தான் என்னே! மானிடர்களே யன்றி பசுவும், பக்ஷியும், வானரங்களும்கூட அவரது சத்சங்கத்தாலும் திவ்ய திருஷ்டியாலும் சாயுஜ்யம் அடைந்ததை ரமணாச்ரம நூல்கள் விரித்துரைக்கின்றன.
பகவான் ரமணரின் பக்தர்களுடைய பெருமையையும் அவர்கள் அருள்நிதியின் அருமையையும் உணர்ந்த ஸ்ரீ வே. கணேசன், பல ரமண பக்தர்களை அணுகி ஆதரித்துப் பெற்றதே இப்பொக்கிஷம். இதனை மற்ற பக்தர்களுடனும் பகிர்ந்து கொள்ளுமுகமாக, முதலில் ஆச்ரம ஆங்கில சஞ்சிகையிலும் பின்னர் தனிப் புத்தகமாகவும் உருக்கொண்டதன் தமிழ் வடிவமே ஸ்ரீ ரமண நினைவலைகள் ஆகும்.
Illustrated.253pp