Description
Language Tamil.ஸ்ரீ ரமணாநுபூதி என்னும் இந்நூல் 1961ல் வெளிவந்த
ஸ்ரீ ரமணாநுபூதி இரண்டாம் பாகம் என்ற நூலின் விரிவாக்கமே. ஸ்ரீ ரமணாநுபூதி முதற் பாகம் விரிவாக்கம் செய்யப்பட்டு குருரமணப் பிரசாதம் என்ற பெயரில் 2004 ஆம் ஆண்டு வெளியிடப்பட்டது.
இந்நூலாசிரியர் ஸ்ரீ முருகனார் உயரிய ரமண பக்தரும் செந்தமிழ்ப் புலவரும் ஆவார். இவர் எ
ழுதிய திருவாசகத்துக்கு நிகரான ஸ்ரீ ரமண சந்நிதி முறை, ஸ்ரீ ரமண ஞான போதம் (9 பாகங்கள்) மற்றும் ஸ்ரீ ரமண சரணப் பல்லாண்டு போன்ற எண்ணிலாச் செந்தமிழ்ப்பாக்கள் ஸ்ரீ ரமண சந்நிதிக்கு மகுடங்களாகத் திகழ்கின்றன. ஏன்? ஸ்ரீ ரமண பகவானின் உபதேச உந்தியார், உள்ளது நாற்பது போன்ற ஸ்ரீ ரமண உபநிடதங்கள் ஸ்ரீ ரமண பகவான் திருவாய் மலர்ந்தருளக் காரணமானவரும் இவரே.
இந்நூல் பல நுண்ணிய கருத்துக்கள் சாதகர்களுக்குப் பயனுள்ள உளவுகளாக அமைந்துள்ளன. ஸ்ரீ ரமண அன்பர்கள் ஓதி உணர்ந்து திருவருளுக்குப் பாத்திரராக இந்நூல் இரண்டாம் பதிப்பாக வெளியிடப்படுகிறது.