Description
Language Tamil.
எளிமையின் திருவுருவமாக வாழ்ந்து காட்டிய பகவான் ஸ்ரீரமணர், ஆன்மீகப் பாதையும் மிக எளிமையானதே என்று சாதகர்களுக்கு உபதேசம் செய்துள்ளார். ஸ்ரீபகவானது உபதேசங்களினால் ஈர்க்கப்பட்டு அவரைச் சரணடைந்து தம் வாழ்க்கையை அவருக்கு அர்ப்பணம் செய்த எண்ணற்ற பக்தர்களில் ஆர்தர் ஆஸ்போர்ன் அவர்களும் ஒருவர். ஆச்ரம ஆங்கில சஞ்சிகையான மௌண்டன் பாத்திற்கு ஆசிரியராக பல ஆண்டுகள் தொண்டு புரிந்த ஆஸ்போர்ன் அவர்களின் ரமண மகரிஷி அண்ட் தி பாத் ஆஃப் ஸெல்ஃப் நாலெட்ஜ் முதன்முதல் 1954ஆம் ஆண்டு இங்கிலாந்தில் பிரசுரிக்கப்பட்டு இதுவரை பல பதிப்புகள் வெளிவந்துள்ளன.
ஸ்ரீபகவானது வாழ்க்கை நிகழ்ச்சிகள், அவரது உபதேசங்கள், பழம்பெரும் பக்தர்கள் சிலரது ஆன்மீக அனுபவங்கள், தொடர்ந்து விளங்கி வரும் ஸ்ரீரமண சாந்நித்தியம் ஆகியவற்றை தெள்ளத் தெளிவாக விளக்கும் இப்புத்தகம் லா.சு. ரங்கராஜன் அவர்களால் தமிழாக்கம் செய்யப்பட்டுள்ளது.
இந்நூல் ஆன்மதாகங் கொண்ட சாதகர்களுக்கு ஒரு சிறந்த வழிகாட்டியாக விளங்குமென்பது திண்ணம்.
pp.ix+370