Description
Sri Ramana Sannidhimurai Mattrum Ramanadeva Malai – Split Version (Tamil)
“சொல்லிய பாட்டின் பொருள் உணர்ந்து சொல்லுவார் செல்வர் சிவ புரத்தின் …” என்ற மாணிக்க வாசக ஸ்வாமிகள் திருவாக்கில் இருந்து உள்ளாழ்ந்த பாராயணத்தின் பெருமையை அறியலாம். தெய்வத் திருவருள் நிறைந்த அருளாளர்கள் பாடல்களின் பொருளை முழுமையாக விளக்குவதும், உணர்வதும் தெய்வ அருள் மூலமே கை கூடும். பகவான் பெருமையை விளக்கும் “ஸ்ரீ ரமண சந்நிதி முறை” இது வரை ஐந்து பதிப்புகள் வெளியிடப் பட்டுள்ளன. ஸ்ரீ ரமணாஸ்ரமத்தின் நூற்றாண்டில் முதல் வெளியீடாக வரும் இந்தப் பதிப்பில் “ஸ்ரீ ரமணதேவ மாலை” என்னும் சிறு நூல் சேர்க்கப்பட்டுள்ளது. இந்த இரு நூல்களும், எளிதில் பாராயணம் செய்யும் வண்ணம், பதம் பிரித்து வழங்கப்பட்டுள்ளன.
மேலும் அன்பர்கள் இந்நூல்களில் உள்ள பாடல்களை ஓதும் முறை அறிந்து பயன் பெற வேண்டி, ஓதுவார் மூலம் பண்/இராக முறைப்படி பாடப் பெற்ற ஒலிப் பதிவுகள் நமது ஆச்ரம இணைய தளத்தின் மூலம் பதிவிறக்கம் செய்து கொள்ள ஏற்பாடு செய்யப் பட்டுள்ளது. அன்பர்கள், இந்த ஒலிப்பதிவுகளை கேட்டு உள்ளாழ்ந்த பாராயணத்தின் பயன் பெற ஸ்ரீ பகவான் திருவருளை வேண்டுகிறோம்.