Description
Language Tamil.ஸ்ரீரமண பகவான் அருளிச் செய்த ஞான சாஸ்திரங்களுள் தலை சிறந்ததாக விளங்குவது “உள்ளது நாற்பது”. வேதாந்த சாரமனைத்தையும் தன்னுள் அடக்கிக் கொண்டு, அளவிற் சிறியதாயினும், அகண்ட ஆன்ம போதத்தில் இது நிகரற்றதாகச் சுடர்விட்டுப் பிரகாசிக்கிறது. உபநிஷத்துக்களின் சாரத்தை திருவருளானது மறுமுறையாக “உள்ளது நாற்பது” வாயிலாக ஸ்ரீ பகவானின் திருவாக்காக வெளிக்கொணர்ந்து மலர்வித்ததோ என்று வியப்பூட்டுகிறது. நுண்ணிய, ஆன்மிகப் பொருளைப் பொலிவுடன் விளக்கிக் காட்டுவதில் இதற்கு ஈடோ இணையோ வேறில்லை.
இந்நூலிற்கு சிவப்பிரகாசம் பிள்ளையவர்கள் இயற்றியுள்ள உரையுடன் இக்கையடக்கப் பிரதி உருவாக்கப்பட்டுள்ளது.
பக்கங்கள் 109