Description
Ramanayanam – Tamil. Poems (Venba) on Sri Ramana Maharshi by Crazy Mohan; Venba Prosody Edited by J. Jayaraman, Librarian, Sri Ramanasramam. Illustrations by Maniam Selven. Pages: x+106.
பகவான் ரமண மகரிஷிகள் ஒரு வெண்பா வேந்தர். மிக அரிய தத்துவக் கருத்துக்களையும் சிக்கனமான வரிகளில் வெண்பாவில் அடக்கித் தெளிவாக அளிப்பார். அவனருளாலே அவன் தாள் வணங்கி என்பதற்கிணங்க பகவானது அடித் தொண்டரான ‘கிரேஸி மோகனும் குருவின் அருளால் குருவினது வாழ்க்கை வரலாறு மற்றும் போதனைகளை கடினமான வெண்பா வடிவில் எளிமையாகவும் தனக்கே உரிய நகைச்சுவை கலந்தும் ‘ரமணாயணமாக யாத்துத் தந்துள்ளார். ‘கிரேஸி மோகன் பகவானுடன் கலந்துவிட்டாலும் அவர் தந்த இந்த ரமணக்கொடை அன்பர்களுக்கு ஒரு ஆன்மிக விருந்தாகும்.